கணவனுடன் சண்டையிட்டு கங்கையில் குதித்த பெண்; முதலைக்கு பயந்து இரவு முழுவதும் மரத்தில் தஞ்சம்
September 20, 2025

கான்பூரில் தனது கணவனுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு 43 வயது பெண் ஒருவர் கங்கை ஆற்றில் குதித்துள்ளார். சுமார் 10 மணி நேரத்திற்குப் பிறகு ஆற்றங்கரையில் சுயநினைவின்றி அவர் மீட்கப்பட்டார். முதலை என நினைத்து பயந்து அருகிலிருந்த கொய்யா மரத்தில் ஏறி, இரவு முழுவதும் அங்கேயே கழித்தார். மறுநாள் காலையில் உள்ளூர்வாசிகள் அவரைப் பார்த்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
குழந்தை இல்லாதது குறித்து தனது கணவருடன் அடிக்கடி சண்டையிடுவதாக அப்பெண் காவல்துறையிடம் தெரிவித்தார். மேலும், தனது கணவர் குடித்துவிட்டு தன்னிடம் சண்டையிடுவதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து காவல்துறையினர் இருவரிடமும் பேசி சமாதானம் செய்து அப்பெண்ணை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.