பாகிஸ்தான் போட்டி குறித்து சூர்யகுமார் யாதவின் அதிரடி பதில்! ரசிகர்கள் உற்சாகம்

ஆசிய கோப்பை 2025 தொடரில், ஓமனை வீழ்த்தி குரூப் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் நேரடியாகவும் கூர்மையாகவும் பதிலளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. போட்டி முடிந்த பின்னர், செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் பாகிஸ்தான் போட்டி குறித்து நேரடியாகக் கேட்கப்பட்டபோது, “சூப்பர் 4-க்கு நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்” என்று மட்டும் பதிலளித்தார்.
சூர்யகுமார் யாதவின் இந்த பதில், கடந்த குரூப் போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த சர்ச்சைக்குப் பிறகு வந்துள்ளது. அவரது சமீபத்திய கருத்து, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான சூப்பர் 4 போட்டியின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.