ஷேக் ஹசீனாவின் வாக்குரிமை பறிப்பு, தேசிய அடையாள அட்டை முடக்கம்

ஷேக் ஹசீனாவின் வாக்குரிமை பறிப்பு, தேசிய அடையாள அட்டை முடக்கம்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டையை (NID) அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியாது. என்ஐடி முடக்கப்பட்டதால், வெளிநாட்டில் இருந்தும் அவரால் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் அடையாள அட்டைகளும் முடக்கப்பட்டுள்ளன. அவரது இளைய சகோதரி ஷேக் ரெஹானா, மகன் சஜீப் வாஜேத் ஜாய் மற்றும் மகள் சாய்மா வாஜேத் புத்துல் ஆகியோரின் என்ஐடிகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், ரெஹானாவின் குழந்தைகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தாரிக் சித்திக்கி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *