பிஎம்டபிள்யூ விபத்தில் உயிரிழந்த கணவருக்கு மனைவி கண்ணீருடன் இறுதி அஞ்சலி

டெல்லியின் தௌலாகுவான் பகுதியில் பிஎம்டபிள்யூ கார் மோதிய விபத்தில் உயிரிழந்த மத்திய நிதி அமைச்சகத்தின் துணைச் செயலாளர் நவ்ஜோத் சிங்குக்கு, அவரது மனைவி சந்தீப் இறுதி விடை கொடுத்தார். இந்த துயர சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குப் பிறகு, நவ்ஜோத்தின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் வெங்கடேஷ்வர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கணவரின் உயிரற்ற முகத்தை சந்தீப் கடைசியாக தொட்டுப் பார்த்த காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நவ்ஜோத்தின் இறுதி சடங்கு பெரி வாலா பாக் மயானத்தில் நடைபெற்றது. இதில் ஜப்பான், தென் கொரியா மற்றும் சீன தூதரகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிதி அமைச்சகத்தின் சார்பில் இந்த நாடுகளுக்கு அவர் இருதரப்புத் தலைவராகப் பணியாற்றி வந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த அவரது மனைவி சந்தீப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.