மரணத்தின் பிடியில் கூட, சிங்கத்துடன் கடுமையாகப் போராடிய காட்டெருமை! வைரலாகும் பரபரப்பான வீடியோ

தகுதியுள்ளவை மட்டுமே பிழைக்கும்’ என்ற காட்டு விதியின் விறுவிறுப்பான காட்சி ஒன்று சமீபத்தில் வைரலாகியுள்ளது. இரண்டு சிங்கங்களின் பிடியில் இருந்து தன் உயிரைக் காப்பாற்ற ஒரு காட்டெருமை கடுமையாகப் போராடும் காட்சியைக் காண முடிகிறது. கடைசியில் இரண்டு சிங்கங்களின் கூட்டுத் தாக்குதலுக்கு அந்த எருமை பலியானாலும், அதன் துணிச்சலும் போராட்ட குணமும் இணைய பயனர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வைரலான இந்த 38-வினாடி வீடியோவில், ஆரம்பத்தில் சிங்கம் ஒன்று காட்டெருமையை தாக்க வர, அதன் துணிச்சலைக் கண்டு பின்வாங்குவது தெரிகிறது. ஆனால் ஒரு கணம் காட்டெருமை கவனக்குறைவாக இருந்தபோது, சிங்கம் பின்னால் இருந்து தாக்கி அதைக் கீழே தள்ளி விடுகிறது. பின்னர் இன்னொரு சிங்கம் வந்து சேர்ந்ததும், காட்டெருமைக்குத் தப்பிப்பதற்கான வழிகள் அனைத்தும் அடைபட்டு விடுகின்றன. இந்த பரபரப்பான வீடியோ X தளத்தில் (முன்னர் ட்விட்டர்) 2.76 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.