மாலத்தீவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 15 மாத கடினத்தின் முடிவு
March 20, 2025

ஃபிபா நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி மாலத்தீவை எதிர்த்து 3-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டி மேகாலயாவில் நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 15 மாதங்களாக வெற்றி பெற முடியாமல் இருந்த இந்திய அணி தனது தோல்வி தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர் சுனில் சேத்ரி, ஓய்வு முடிவுக்குப் பின் மீண்டும் அணியில் சேர்ந்து விளையாடியது முக்கிய நிகழ்வாக இருந்தது. சேத்ரியின் பங்களிப்பு அணிக்கு ஊக்கமளித்ததோடு, இந்திய அணி தனது சிறந்த ஆட்டத்தைக் காண்பித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த வெற்றி, இந்திய அணிக்கு எதிர்கால போட்டிகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் முக்கியமான அடிப்படை எனக் கருதப்படுகிறது.