8,000 பேருக்கு பறிபோன வேலை.. AI-யின் காலமா?
May 27, 2025

நேரத்தை கடந்த தொழில்நுட்ப மாற்றங்கள் இன்று பல நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதில் முக்கியமாக IBM நிறுவனம் சமீபத்தில் அறிவித்த 8,000 பணியாளர்களின் பணிநீக்கம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மனிதவளத்துறையில் (HR) பணிபுரியும் பலர் இந்த பாதிப்பை அதிகமாக சந்திக்க நேரிடியுள்ளது.
IBM நிறுவனம், 200க்கும் மேற்பட்ட HR வேலைகளை செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் இயக்கத் தொடங்கியது. இதனால், எளிதில் தானாகவே செய்யக்கூடிய பணிகளை AI மிகச் சீராக மேற்கொண்டு வருகின்றது. இந்த மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சியின் வலிமையையும், மனித வேலைவாய்ப்புகளின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. AI-யின் காலத்தில் மனிதர்கள் எவ்வாறு தங்களை தக்கவைத்து நின்றுக்கொள்ளலாம் என்பதே தற்போதைய பெரிய சவாலாக அமைந்துள்ளது.