29ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: மக்கள் குழப்பம் நீங்கியது
March 26, 2025

திமுக அரசு அறிவிப்பின்படி, வரும் மார்ச் 29ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் இயங்கும். தெலுங்கு புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதிகள் தமிழகத்தில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ரேஷன் கடைகளில் ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், வரும் 29ஆம் தேதி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நாளில் ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என அரசு வெளியிட்ட அறிவிப்பு மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் பொதுமக்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் வாங்க உள்ள பயனாளர்கள் சந்தித்த குழப்பம் தீர்ந்துள்ளது.