2026 முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ பாடம் அறிமுகம் மற்றும் கல்வி முறையில் அதிரடி மாற்றம்

2026 முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ பாடம் அறிமுகம் மற்றும் கல்வி முறையில் அதிரடி மாற்றம்

மத்திய கல்வி அமைச்சகம் 2026-27 கல்வியாண்டு முதல் மூன்றாம் வகுப்பிலிருந்தே செயற்கை நுண்ணறிவு மற்றும் கணக்கீட்டு சிந்தனையை கட்டாயப் பாடமாக்க முடிவு செய்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020-ன் கீழ் மாணவர்களை எதிர்கால தொழில்நுட்ப உலகிற்கு தயார்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கான புதிய பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி அமைப்புகள் உருவாக்கி வருகின்றன.

ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் ஏஐ கட்டாயப் பாடமாக்கப்படும் நிலையில் மேல்நிலைக் கல்வியில் 2027 முதல் மேம்பட்ட பாடத்திட்டம் அமலாகும். இயந்திர கற்றல் மற்றும் நிரலாக்கம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெறும். ஆசிரியர்களுக்கு இதற்கென சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *