2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வரி இல்லாத நாடு

2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வரி இல்லாத நாடு

மக்கள் தொகை குறைவதை சமாளிக்க, ஹங்கேரி அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் வெளியிட்ட அறிவிப்பில், குழந்தை பெற்ற பெண்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு குழந்தை பெற்ற தாய்மார்கள் 30 வயது வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அதேசமயம், இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இந்த திட்டம் மூலம் மக்களை அதிகளவில் குழந்தைகள் பெற ஊக்குவிக்கவே அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஹங்கேரியில் மக்கள் தொகை குறைவதை சமாளிக்க இது ஒரு முக்கிய நடவடிக்கை என கருதப்படுகிறது. தமிழகத்திலும் இதுபோன்ற திட்டம் அமல்படுத்தலாமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. மக்கள் தொகை குறைவால் பாதிக்கப்படும் நாடுகளில் இது ஒரு முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *