18 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை நாளை முதல் தொடக்கம்

வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையிலான 5 கி.மீ நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் தடத்தில் நாளை (பிப்ரவரி 14) முதல் பொதுமக்களுக்கான சேவை தொடங்குகிறது. புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய புதிய நிலையங்களுடன் இந்த தடத்தில் தினமும் மொத்தம் 96 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு, இந்த நீண்டகாலத் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்த புதிய சேவையின் மூலம் வேளச்சேரி மற்றும் ஓ.எம்.ஆர் பகுதி மக்கள் பரங்கிமலையில் எளிதாகத் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில்களுக்கு மாற முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக தொடக்கத்தில் ரயில்கள் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களை இணைக்கும் முக்கிய மையமாக பரங்கிமலை உருவெடுத்துள்ள நிலையில், இந்த விரிவாக்கம் தென் சென்னை பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.