₹3,400 கோடி சொத்து.. மகனுக்கு ஏன் கொடுக்கவில்லை?

உலகப் புகழ்பெற்ற சினி நடிகரும் குங் ஃபூ மாஸ்டருமான ஜாக்கி சான், தனது ₹3,400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது மகனுக்குப் பதிலாக ஏழை மாணவர்களின் கல்விக்காக வழங்கியுள்ள செய்தி தற்போது உலகம் முழுவதும் பாராட்டை பெறுகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் எடுத்த இந்த முடிவு, சமூகத்தில் பெரும் திருப்தியையும், உந்தலையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பண்பாட்டை சமூக வலைதளங்களில் பலரும் புகழ்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பலர் “அந்த அளவுக்கு சொத்து இருந்தும், ஏன் தனது மகனுக்கு கொடுக்கவில்லை?” என கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கான பதிலை ஜாக்கி சான் ஏற்கனவேத் தெரிவித்திருந்தார். “என் மகன் திறமையுடையவன் என்றால், தனது முயற்சியால் பணம் சம்பாதிக்கக்கூடியவனாக இருப்பான். இல்லையெனில், என் சொத்துகளை வீணடிப்பான்,” என அவர் நேர்மையாகக் கூறியிருந்தார். அவரது இந்த கருத்து, இன்று பெற்றோர்களிடையே பெரும் விவாதத்திற்கும் சிந்தனைக்கும் வழிவகுக்கிறது.