ஹசீனா கட்சி இல்லாமலும் தேர்தல் முறைகேடு அச்சத்தில் வங்கதேசம்: பின்னணி என்ன?

வங்கதேசத்தில் 13-வது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ‘தேர்தல் இன்ஜினியரிங்’ (Election Engineering) என்ற வார்த்தை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவாமி லீக் கட்சி இல்லாத ஒரு தேர்தல் நடக்கும் போதிலும், எந்த ஒரு கட்சியும் தங்களின் வெற்றியை உறுதிப்படுத்த முடியாமல் தவிக்கின்றன.
மேற்கு வங்கத் தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘வாக்குச்சாவடி பிடிப்பு’ (Rigging) போன்ற முறைகேடுகளின் வங்கதேச வடிவமே இந்த ‘இன்ஜினியரிங்’ என்று பொதுமக்கள் கருதுகின்றனர். இது அடிப்படையில் தசை வலிமை அல்லது தந்திரமான உத்திகள் மூலம் தேர்தல் முடிவுகளைச் சாதகமாக மாற்றுவதைக் குறிக்கிறது.
தற்போது பிஎன்பி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பெரிய கட்சிகளும் ஒருவருக்கொருவர் வாக்கு மோசடி குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றன. பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஜமாத் கட்சியும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “பகலில் நடக்க வேண்டிய வாக்குப்பதிவு இரவில் நடந்த” கடந்த கால கசப்பான அனுபவங்களால், தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடக்குமா என்ற சந்தேகம் மக்களிடையே நீடிக்கிறது.