ஷ்ரேயஸ் குறித்த கேள்வி.. கம்பீர் கொடுத்த பதில்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்Squad-இல் ஷ்ரேயஸ் ஐயர் இடம் பெறாதது குறித்து கம்பீரிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போது, “நான் தேர்வுக்குழு உறுப்பினர் இல்லை” எனக் கடுமையான பதிலை அவர் அளித்தார். மேலும், அவர் அணி தேர்வில் தன்னால் எதையும் கூற முடியாது என்றும் தெரிவித்தார். இது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்த விவகாரத்தில் அதிகம் பேசாமல் இருந்தாலும், IPL நிறைவு விழாவில் ராணுவ தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்காக BCCI-ஐ கம்பீர் பாராட்டினார். இந்த சிறப்பான ஏற்பாட்டை பாராட்டிய அவர், “நாடு முழுவதும் ராணுவத்துடன் நின்று கொண்டிருக்கிறது” என உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டார். கிரிக்கெட் மட்டுமல்ல, நாட்டுப்பற்றையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு பெருமை அளிக்கிறது எனவும் அவர் கூறினார்.