வேளாங்கண்ணி பக்தர்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு இதோ வாராந்திர சிறப்பு ரயில்
March 14, 2026

எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து வேளாங்கண்ணி வரை புதிய வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் மார்ச் 18 முதல் தொடங்கும் இந்தச் சேவை, ஒவ்வொரு புதன்கிழமை இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் மாலை வேளாங்கண்ணியை சென்றடையும்.
இந்த ரயில் மதுரை வழியாக இயக்கப்படுவது தென் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ள இந்த நேரடி ரயில் வசதி, வேளாங்கண்ணி புனிதத்தலத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.