விளாத்திகுளம் விவகாரத்தில் கனிமொழியின் பேச்சு அநாகரீகம் என நடிகை கௌதமி கடும் கண்டனம்

விளாத்திகுளம் விவகாரத்தில் கனிமொழியின் பேச்சு அநாகரீகம் என நடிகை கௌதமி கடும் கண்டனம்

கோவையில் நடைபெற்ற அதிமுக விழாவில் பங்கேற்ற நடிகை கௌதமி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கனிமொழி எம்.பி.யின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் பேச முடியும் எனக் கூறுவது மனிதத்தன்மையற்ற செயல் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறக்கூட அவருக்கு மனமில்லை என்றும் அவர் சாடினார்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதற்குக் காரணமான திமுக அரசு, எதிர்காலத் தலைமுறையையே அழித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். தேர்தலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்குவது மக்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கும் செயலாகும். போக்சோ வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என கௌதமி கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *