விமானியின் பாஸ்போர்ட் மறதி: பாதியில் திரும்பிய விமானம்!

விமானியின் பாஸ்போர்ட் மறதி: பாதியில் திரும்பிய விமானம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் சீனா நோக்கி புறப்பட்ட விமானம், இரு மணி நேரப் பறப்புக்குப் பிறகு திரும்பி அமெரிக்காவிற்கே வந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. விமானம் பசுபிக் பெருங்கடலில் மேலே பறந்து கொண்டிருந்தபோது, விமானியின் பாஸ்போர்ட் இல்லையென்பது தெரியவந்துள்ளது.

விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாததால், விமானம் மீண்டும் சான் பிரான்ஸிஸ்கோவுக்குத் திரும்பியது. அங்கு புதிய விமானிகள் குழுவை ஏற்பாடு செய்த பின்னர், விமானம் மீண்டும் சீனா நோக்கி புறப்பட்டது. இந்த சம்பவம் பயணிகளிடையே சற்றே பரபரப்பை ஏற்படுத்தியிருந்த போதிலும், விமான நிலைய அதிகாரிகள் இச்சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *