விண்வெளியில் இருந்து பத்திரமாக திரும்பிய சுனிதா, வில்மோர்

விண்வெளியில் இருந்து பத்திரமாக திரும்பிய சுனிதா, வில்மோர்

9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பணியாற்றிய அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக திரும்பியுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா அறிவித்துள்ளது.

விண்வெளியில் நீண்ட காலம் கழித்த பிறகு மனித உடலின் நிலைமைக்கு தகுந்தபடி சிகிச்சை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்கள் உடல் நலன் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த பயணம் மூலம் ISS இல் உள்ள பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளில் இருவரும் முக்கிய பங்கை வகித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *