விஜய்யின் பெருந்தன்மை என்னை நெகிழ வைத்துவிட்டது என உருக்கமாக பேசிய செங்கோட்டையன்
March 12, 2026

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் விழாவில் பங்கேற்றபோது ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். விஜய் போன்ற ஒரு தலைவரைப் பார்ப்பது அரிது என்று குறிப்பிட்ட அவர், விஜய்யின் அரசியல் பண்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது சட்டைப் பையிலிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைக் கண்ட விஜய், அதை மாற்ற வேண்டாம் என்றும் அந்தப் படத்தையே வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழலில் தனது படத்தை விட மற்ற தலைவர்களின் படத்திற்கு மதிப்பளிக்கும் விஜய்யின் செயல் செங்கோட்டையனை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.