வாக்காளர் அட்டைக்கு ஆதார் இணைப்பு கட்டாயமா? புதிய வழிகாட்டுதல்கள் விரைவில்

வாக்காளர் அட்டைக்கு ஆதார் இணைப்பு கட்டாயமா? புதிய வழிகாட்டுதல்கள் விரைவில்

வாக்காளர் பட்டியல் நேர்த்தி குறித்து நீண்ட காலமாக விவாதங்கள் நடைபெற்று வந்தாலும், சமீபத்தில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது. வாக்காளர் அட்டை (EPIC) மற்றும் ஆதார் இணைப்பை மேற்கொள்வது குறித்து ஓரிரு ஆண்டுகளாக விவாதங்கள் நடந்துவந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் மற்றும் UIDAI இணைந்து இந்த விஷயத்தை ஆய்வு செய்ய இருக்கின்றன.

செவ்வாய்கிழமை டெல்லியில் முக்கியக் கூட்டம் நடைபெற்றது, இதில் மத்திய உள்துறை செயலாளர், சட்ட அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர், தகவல் தொழில்நுட்ப செயலாளர் மற்றும் UIDAI தலைமை நிர்வாக அதிகாரி கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு, ஆதார்-EPIC இணைப்பின் தொழில்நுட்ப அம்சங்களை பரிசோதிக்க விரைவில் சிறப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *