வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும் என ஹமாஸ் திடீர் கோரிக்கை

வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கத்தாரின் அழுத்தம் காரணமாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. சவுதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய நாடுகளுடனான உறவைப் பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை அவசியம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு முழு உரிமை உண்டு என்பதையும் அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த திடீர் அறிக்கை சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.