வரலாற்றில் இன்று: முக்கிய நிகழ்வுகள்

வரலாற்றில் இன்று: முக்கிய நிகழ்வுகள்

வரலாற்றில் இன்று, மார்ச் 19ஆம் தேதி பல முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

1915ஆம் ஆண்டு இன்று, புளூட்டோவின் புகைப்படம் முதன்முறையாக எடுக்கப்பட்டது. பின்னர் 1930ஆம் ஆண்டு தான் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டது. 1944ஆம் ஆண்டு 2ஆம் உலகப் போர் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், நாசி ஜெர்மனிப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றியது. இது யூரோப் மண்டலத்தில் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது.

1962ஆம் ஆண்டு அல்ஜீரியா விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்து, அல்ஜீரிய மக்கள் தங்களது சுதந்திரத்தை உறுதிசெய்தனர். 1972ஆம் ஆண்டு இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இரு நாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்தியது.

1988ஆம் ஆண்டு, அன்னை பூபதி இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். துரதிருஷ்டவசமாக, அவர் ஏப்ரல் 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *