வங்கதேசத்தில் ஜேம்ஸ் இசை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் தாக்குதல் மாணவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட காயம்
December 28, 2025

ஃபரித்பூர் மாவட்டப் பள்ளியின் மறுசீரமைப்பு விழாவின் போது, புகழ்பெற்ற ராக் பாடகர் ஜேம்ஸின் இசை நிகழ்ச்சியை குறிவைத்து தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். மேடையை ஆக்கிரமித்த கும்பல் சரமாரியாக கற்களை வீசியதில், சுமார் 30 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், ஜேம்ஸ் மேடை ஏறாமலேயே டாக்கா திரும்பினார்.
இந்த வன்முறைச் சம்பவம் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க கலைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஸ்லிமா நஸ்ரின் உள்ளிட்டோர் இச்சம்பவத்தை கலாச்சார வீழ்ச்சி என விமர்சித்துள்ளனர். மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும், ஜேம்ஸ் போன்ற ஒரு கலைஞருக்கு நேர்ந்த இந்த கதி, அந்நாட்டின் தற்போதைய பதற்றமான சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.