லெபனான் மக்கள் குடியிருப்புகள் மீது தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் தாக்குதல் உலகத்தையே உலுக்கியுள்ளது

லெபனானின் தெற்கு நகரமான யோமோரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த மார்ச் 3 அன்று மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது இந்த அபாயகரமான ரசாயன ஆயுதம் வீசப்பட்டதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், இது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்று கூறியுள்ளனர்.
வெள்ளை பாஸ்பரஸ் காற்றில் பட்டவுடன் எரியக்கூடியது, இது வீடுகள் மற்றும் விளைநிலங்களை நொடியில் சாம்பலாக்கும் திறன் கொண்டது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இத்தகைய ரசாயன ஆயுதப் பயன்பாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலும், தற்போதைய சூழல் மிகவும் பதற்றமாகவே காணப்படுகிறது.