லம்போர்கினி விபத்து: ரூ. 20,000 பிணையில் முக்கிய குற்றவாளி விடுதலை – அதிரடி திருப்பம்!
February 12, 2026

கான்பூரில் அதிவேகமாக வந்த லம்போர்கினி கார் மோதி பலரது வாழ்க்கை சிதைந்த நிலையில், இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்து நான்கு நாட்களே ஆன நிலையில், முக்கிய குற்றவாளியான சிவம் மிஸ்ரா வெறும் 20,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
புகழ்பெற்ற புகையிலை தொழிலதிபரின் மகனான சிவம் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. காவல்துறையிடம் சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும், விபத்தின் போது அவருக்கு ‘வலிப்பு’ ஏற்பட்டதாகக் கூறி தப்பிக்க முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சாமான்ய மக்களின் உயிரை விட செல்வாக்கு படைத்தவர்களின் ஆடம்பரமே பெரியதா என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, சாலை பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் இந்தச் சம்பவம் கேள்விக்குறியாக்கியுள்ளது.