லஞ்சம் கொடுத்த விவகாரம்: Ex அமைச்சர் காமராஜின் உறவினர் கைது

லஞ்சம் கொடுத்த விவகாரம்: Ex அமைச்சர் காமராஜின் உறவினர் கைது

புதுச்சேரியில் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு லஞ்சம் வழங்கிய சம்பவத்தில், அதிமுக Ex அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன் கைது செய்யப்பட்டார். இது கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

₹7.44 கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்தத்திற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் 1% லஞ்சமாக கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதற்கட்டமாக ₹2 லட்சம் வழங்கப்பட்டபோது, இளமுருகன் மற்றும் பொறியாளர் தீனதயாளன் ஆகியோரை CBI அதிகாரிகள் நேரில் பிடித்தனர். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் முன்னணி அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரிகளின் நேர்மையை பற்றி கேள்விகள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *