ராணுவத்திற்கு மேலும் ஒரு பிரம்மாஸ்திரம்

ராணுவத்திற்கு மேலும் ஒரு பிரம்மாஸ்திரம்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் பலத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 5-ம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவிலேயே உள்நாட்டில் உற்பத்தி செய்ய உத்தியோகபூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான ஏலம் விரைவில் அறிவிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு மட்டுமே இத்தகைய உயர் தொழில்நுட்ப போர் விமானங்கள் உள்ளன. இந்தியாவும் இப்போது அதே தரத்தில் தன்னை நிலைநாட்ட இதன் மூலம் முயற்சி எடுத்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் சீனாவின் விமானப்படை விரிவாக்கம் ஆகியவை இந்த தீர்மானத்திற்கு முக்கிய காரணிகளாகும். இந்த புதிய முயற்சி இந்தியாவின் தற்காப்பு துறையில் பெரும் முன்னேற்றத்தையும், உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tama Sarkar
  • Tama Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *