ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரம்: நீதிமன்ற உத்தரவு
March 25, 2025

கர்நாடகாவைச் சேர்ந்த சிஷிர் என்பவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய குடியுரிமை இல்லாமல் UK நாட்டின் குடியுரிமை வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில், ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே ராகுல் காந்தி முற்றிலும் பொய்யானது என்று மறுத்து உள்ளார். அவர், “நான் முழுமையாக இந்திய குடியுரிமை கொண்ட இந்திய பிரஜை” என்று பலமுறை அறிவித்தும், இந்த விவகாரம் தொடர்ந்து அரசியல் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.
இந்த வழக்கு நாட்டின் அரசியல் சூழ்நிலையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.