ரவுடிகள் கண்காணிப்பு கடுமையாகும் – இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்களுக்கு கண்டிப்பான எச்சரிக்கை

ரவுடிகள் கண்காணிப்பு கடுமையாகும் – இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்களுக்கு கண்டிப்பான எச்சரிக்கை

:
தமிழக காவல் துறை அதிகாரிகள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால், மாநிலத்தின் அனைத்து ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், தமிழகமெங்கும் உள்ள ரவுடிகளின் பட்டியலை உடனடியாக தாக்கல் செய்யுமாறு அவர் உத்தரவிட்டார்.

மேலும், ரவுடிகள் தொடர்பான தகவல்களை உளவுத்துறையினர் வழங்கினாலும், அதன்படி நடவடிக்கை எடுக்க தவறிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். இந்த நடவடிக்கையில், குற்றப்புறச்சாட்டு உடனடியாக நிரூபிக்கப்பட்டால், அந்த அதிகாரிகள் பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதனால் காவல் துறையில் அனைத்து அதிகாரிகளும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *