யுபிஐ சேவைகள் நிறுத்தம்: செயலற்ற எண்களுக்கு எச்சரிக்கை!

யுபிஐ சேவைகள் நிறுத்தம்: செயலற்ற எண்களுக்கு எச்சரிக்கை!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்ட அறிவிப்பின்படி, யுபிஐ (UPI) சேவைகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாட்கள் வரை செயலற்றதாக இருந்தால், அந்த எண்ணின் யுபிஐ சேவை நிறுத்தப்படும். இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

இந்த நடைமுறையால், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் மொபைல் எண்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் செயலிழக்கச் செய்யப்படுவதுடன், அவ்வாறான எண்கள் மற்ற பயனர்களுக்கு வழங்கப்படும். இதனால், புதிய பயனர் அந்த எண்ணைப் பெறும்போது, முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் மொபைல் எண் செயலிழக்காதவாறு, அவ்வப்போது அழைப்புகள் மேற்கொள்வது, எஸ்எம்எஸ் அனுப்புவது அல்லது இணையச் சேவைகளை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. இது உங்கள் யுபிஐ சேவைகளை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க உதவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *