மும்பையில் காஸ் தட்டுப்பாட்டால் ۲۰ சதவீத உணவகங்கள் அதிரடி மூடல்
March 10, 2026

மேற்கு ஆசியப் போர் சூழலால் வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு மும்பை ஹோட்டல் தொழில் முடங்கியுள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டால் நகரின் ۲۰ சதவீத உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், நிலைமை நீடித்தால் பாதிக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாகவும் ‘ஆஹார்’ சங்கம் எச்சரித்துள்ளது. புனேவில் மின் மயானங்கள் கூட தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சிலிண்டர் பதுக்கலைத் தடுக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி சிலிண்டர் முன்பதிவு செய்ய ২৫ நாட்கள் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது, இது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.