மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்கு இடையே கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் மும்பை துறைமுகத்திற்கு வருகை

மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்கு இடையே கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் மும்பை துறைமுகத்திற்கு வருகை

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தால் பெரும் கவலை ஏற்பட்ட நிலையில், சவுதி அரேபியாவிலிருந்து 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ கப்பல் பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தது. மிக ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த முதல் சரக்கு கப்பல் இதுவாகும். கடந்த மார்ச் 8 ஆம் தேதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகாமல் 29 பணியாளர்களுடன் இக்கப்பல் வெற்றிகரமாக இந்தியா வந்து சேர்ந்தது.

இந்த கப்பல் வந்தடைந்த போதிலும் கடல் வழி வர்த்தகத்தில் இந்தியாவிற்கான சவால்கள் இன்னும் குறையவில்லை. ஈரானின் சுரங்க அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மேலும் 28 சரக்கு கப்பல்கள் அந்த பகுதியில் சிக்கியுள்ளன. எரிசக்தி இறக்குமதிக்கு முக்கியமான இந்த கடல் பாதை போர்க்களமாக மாறியுள்ளதால், எஞ்சிய கப்பல்களின் பாதுகாப்பு குறித்து இந்திய துறைமுக அதிகாரிகள் மற்றும் அமைச்சகங்கள் தற்போது தீவிர கவலையில் உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *