மத்திய அரசு வரி குறைப்பு செய்தும் தற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பில்லை

மத்திய அரசு வரி குறைப்பு செய்தும் தற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பில்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் மத்திய அரசு குறைத்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக உயர்ந்ததால், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைச் சரிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடி விலை குறைப்பு இருக்காது என்றும் 15 நாட்களுக்கு ஒருமுறை விலை மறுஆய்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தியில் விநியோக பாதிப்பு ஏற்பட்டாலும், இந்தியாவில் அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் 30 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் அதிகப்படியாக எரிபொருளை வாங்க வேண்டாம் என பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய மாற்று வழிகளை மத்திய அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *