மத்திய அரசுப் பள்ளிகளில் 13000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அதிரடி நடவடிக்கை
March 16, 2026

மத்திய கல்வி அமைச்சகம் கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா பள்ளிகளில் 13,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தெரிவித்துள்ளது. ஓய்வு மற்றும் பதவி உயர்வு போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ள இந்த காலிப் பணியிடங்களை முறையாக நிரப்ப மத்திய அரசு தற்போது தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விரைவில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சௌதரி உறுதியளித்துள்ளார். இந்த பள்ளிகள் தொடர்ந்து சிறந்த தேர்ச்சி விகிதத்தை தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.