மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம்! ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் கியாரண்டி’ என புதிய பெயரால் அழைக்கப்படும்

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம்! ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் கியாரண்டி’ என புதிய பெயரால் அழைக்கப்படும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனி இந்த முக்கியத் திட்டம் ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் கியாரண்டி’ (Pujya Bapu Gramin Rozgar Guarantee) என்று அழைக்கப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, திட்டத்திற்கு புதிய அடையாளத்தைக் கொடுக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புதிய பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புற ஏழைகளுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை உறுதி செய்யப்படும். இதற்காக, ₹1.51 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 2005 இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், கிராமப்புறக் குடும்பங்களுக்குப் பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும் மிக முக்கியமான அரசுத் திட்டங்களில் ஒன்றாகும். அத்துடன், அணுசக்தி துறையில் முதலீட்டை ஊக்குவிக்க ‘சாந்தி மசோதா 2025’ மற்றும் கல்வித்துறையில் சீர்திருத்தங்களுக்காக ‘விக்சித் பாரத் சிக்ஷா ஆதிஸ்தான் மசோதா 2025’ ஆகியவற்றிற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *