மகாத்மா காந்தி பெயரில் ஊழல் செய்யும் காங்கிரஸ் நிஷிகாந்த் துபே கடும் சாடல்
December 18, 2025

நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, மகாத்மா காந்தி பெயரில் நடைபெறும் திட்டங்களில் காங்கிரஸ் பெரும் ஊழல் செய்வதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஐம்பது சதவீத கமிஷன் பெறப்படுவதாகவும், கடந்த இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் இதில் முறைகேடு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு விதிகளின்படி குடியரசுத் தலைவர் அல்லது தேசப்பிதா பெயரில் திட்டங்கள் இருக்கக்கூடாது என்று அவர் வாதிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் லோக்பால் அமைப்பதன் மூலமும், வேலைகளைத் துல்லியமாக அளவிடுவதன் மூலமும் இந்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் உறுதிபடக் கூறினார். இந்த மசோதாவை அரசு மிகுந்த தீவிரத்துடன் அணுகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.