மகாசிவராத்திரி விரதம்: இந்த உணவுகளைத் தொடவே கூடாது! கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள்

வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி மகாசிவராத்திரி விரதம் இருக்கத் திட்டமிடுகிறீர்களா? வழிபாட்டில் முழு பலன் கிடைக்க வேண்டுமெனில் சில உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். இந்த புனித நாளில் அரிசி, பருப்பு அல்லது கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பால், ஜவ்வரிசி கிச்சடி அல்லது பழங்கள் போன்ற சாத்வீக உணவுகளை உட்கொள்வது உங்கள் பக்திக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சிவபெருமானின் அருளைப் பெற விரதத்தோடு வழிபாட்டு முறைகளிலும் கவனம் தேவை. தேங்காயை நைவேத்தியமாக படைக்கலாம், ஆனால் தேங்காய் தண்ணீரை சிவனுக்கு அபிஷேகம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்பது முக்கிய விதி. சரியான ஆச்சாரங்களுடன் விரதத்தைக் கடைப்பிடிப்பது மனதிற்கும் உடலுக்கும் அமைதியைத் தரும்.
நான்கு கால பூஜை நேரங்கள்
மகாசிவராத்திரி அன்று நான்கு காலங்களிலும் விழித்திருந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது மரபு. அதன் நேரங்கள் இதோ:
- முதல் கால பூஜை: பிப்ரவரி 15, மாலை 6:11 முதல் இரவு 9:22 வரை.
- இரண்டாம் கால பூஜை: பிப்ரவரி 15, இரவு 9:23 முதல் பிப்ரவரி 16, அதிகாலை 12:34 வரை.
- மூன்றாம் கால பூஜை: பிப்ரவரி 16, அதிகாலை 12:35 முதல் அதிகாலை 3:46 வரை.
- நான்காம் கால பூஜை: பிப்ரவரி 16, அதிகாலை 3:47 முதல் காலை 6:49 வரை.
மேலும், பிப்ரவரி 16-ஆம் தேதி அதிகாலை 12:09 முதல் 1:01 மணி வரை நிலவும் ‘நிசித கால’ பூஜை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.