மகப்பேறு விடுப்பு மறுத்த நீதிபதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மகப்பேறு விடுப்பு மறுத்த நீதிபதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் அலுவலக உதவியாளருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்த நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.

அந்த பெண் ஊழியரின் கணவர் 2020 ஆம் ஆண்டு காலமானார். பின்னர், அவர் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் கோவிலில் நடந்த நிலையில், அது பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து, அவர் கர்ப்பமான நிலையில் மகப்பேறு விடுப்பு கோரினார். ஆனால், அவருக்கு விடுப்பு வழங்க மறுத்து, திருமணம் பதிவு செய்யப்படாதது, FIR-ஐ திருமணத்தின் ஆதாரமாக ஏற்க முடியாது என்பன உள்ளிட்ட காரணங்களை நீதிபதி கூறினார்.

இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் ஊழியர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில், திருமண புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் போன்ற ஆதாரங்களை தாக்கல் செய்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த முடிவை மனிதாபிமானமற்றதாக விமர்சித்து, மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்ததை கண்டித்தனர். மேலும், மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *