போரை நிறுத்தவில்லை என்றால் 100 சதவிகித வரி, ரஷ்யாவுக்கு டிரம்ப்பின் இறுதி எச்சரிக்கை

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். திங்களன்று வெள்ளை மாளிகையில் இருந்து அவர் அறிவிக்கையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால், மாஸ்கோ மீது 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்றார். ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் இதுவே “எளிதான வழி” என்று டிரம்ப் தெளிவுபடுத்தினார்.
இந்த வரி அச்சுறுத்தலுடன், டிரம்ப் நிர்வாகம் உக்ரைனுக்கு தற்காப்புக்காக ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த விவாதிக்க டிரம்ப்பின் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் ஏற்கனவே கீவ் வந்துள்ளார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, உக்ரைனின் பாதுகாப்புக்கு இந்த பேட்ரியாட் அமைப்புகள் மிகவும் முக்கியமானவை என்றும், கீவ்க்கு பல அலகுகள் அனுப்பப்படும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.