‘பேயை விரட்டுவதாக’ கூறி சிறுமியின் ஆடைகளை களைந்து தாந்திரீகர் அத்துமீறல்: பரபரப்பு

உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் 12 வயது சிறுமியுடன் மூடநம்பிக்கை பெயரில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சைக்காக, மத்தியப் பிரதேசத்தின் நிவாரியைச் சேர்ந்த ஹர்பஜன் என்ற தாந்திரீகர் அழைக்கப்பட்டிருந்தார். அச்சிறுமியை ஒரு மூடிய அறைக்குள் அழைத்துச் சென்ற தாந்திரீகர், ‘பேய் பிடித்திருப்பதாக’ கூறி அவரது அனைத்து ஆடைகளையும் கழற்றுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், அவர் எலுமிச்சையை உடலில் தேய்த்து, சிறுமியிடம் ஆபாசமான முறையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அறைக்குள் வந்தபோது, தாந்திரீகர் மற்றொரு வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டார். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், பாருவாசாகர் காவல்நிலையத்தில் ஹர்பஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.