பெண் அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பின்படி, தற்போது probation காலத்தில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு (Maternity Leave) உரிமை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை probation காலத்தில் உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாததால், அவர்களது பதவி உயர்வு காலதாமதமாகி, பணி மூப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைக்க அரசு இந்த முக்கியமான தீர்மானத்தை எடுத்துள்ளது.
முந்தைய சட்டப்படி probation காலத்தில் உள்ள பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பை பெற முடியாத நிலை இருந்தது. இது அவர்களின் சேவைக்காலம் மற்றும் முன்னேற்ற வாய்ப்புகளை தடுக்கும் விதமாக இருந்தது. இதனை சரிசெய்யும் வகையில், சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாகவே இந்த நடவடிக்கையை அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.