பெட்ரோல், டீசல் விலை உயர்வா? இந்தியாவுக்கு விழும் பிாச்சனை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? இந்தியாவுக்கு விழும் பிாச்சனை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா எண்ணெய் வர்த்தகத்துக்கு 25% வரி விதித்திருப்பது சர்வதேச சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இது முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

டிரம்ப் உத்தரவு: 1977ஆம் ஆண்டு சர்வதேச அவசர பொருளாதார சக்திகள் சட்டத்தை பயன்படுத்தி, வெனிசுலாவின் எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது 25% வரி விதிக்கப்படுமென டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா எண்ணெய் நிறுவனமான PDVSAவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிறுவனங்கள் அமெரிக்க டாலர் பரிவர்த்தனை செய்ய முடியாது என அவர் தெரிவித்தார். இதனால் சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டு, கச்சா எண்ணெய் பற்றாக்குறை உருவாகலாம்.

இந்தியாவுக்கு பாதிப்பு: இந்தியா வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்காத போதிலும், சீனா அதன் எண்ணெய் தேவையின் 55%-ஐ வெனிசுலாவிடமிருந்து பெறுகிறது. அமெரிக்காவின் தடையால் சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளை நாடியால் எண்ணெய்க்கான போட்டி அதிகரித்து, விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு இது ஒரு சவாலாக இருக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *