பால் பொருட்களில் கலப்படத்தை தடுக்க எப்எஸ்எஸ்ஏஐ அதிரடி நடவடிக்கை மற்றும் பால் விற்பனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

பால் பொருட்களில் கலப்படத்தை தடுக்க எப்எஸ்எஸ்ஏஐ அதிரடி நடவடிக்கை மற்றும் பால் விற்பனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

நாட்டில் நெய் மற்றும் பன்னீர் போன்ற பால் பொருட்களில் அதிகரித்து வரும் கலப்படத்தைத் தடுக்க உணவு பாதுகாப்பு ஆணையமான எப்எஸ்எஸ்ஏஐ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வெளியே இருக்கும் அனைத்து பால் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் இனி கட்டாயம் உரிமம் அல்லது பதிவு பெற வேண்டும். பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், பால் வணிகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்டறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு சோதனைகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாலின் தரத்தைப் பராமரிக்க குளிரூட்டும் சாதனங்களை முறையாக ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் வணிகம் செய்பவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எப்எஸ்எஸ்ஏஐ எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *