பார்க்கில் பிணமாக தொங்கிய ஜோடி… தலைநகரில் அதிர்ச்சி
March 24, 2025

தில்லி மாநகரை உலுக்கிய ஒரு கொடூரமான சம்பவம் மான் பூங்காவில் நிகழ்ந்துள்ளது. காலை நேரத்தில் வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள், ஒரு மரத்தில் இரண்டு பேரின் உடல்களை பிணமாக தொங்கிய நிலையில் கண்டனர். உடனே அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மரணமடைந்தவர்கள் 17 வயது சிறுவன், சிறுமி எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் நைலான் கயிற்றால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்தனர். இது தற்கொலையா, இல்லை வேறு காரணமா என காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அவர்களின் குடும்பப் பின்னணி மற்றும் சம்பவத்திற்கான சூழ்நிலைகளை ஆராயும் விதமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.