பாஜக சார்பில் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பரிசு – 32 லட்சம் பேருக்கு ‘சவுகத்-இ-மோடி’ கிட்!

பாஜக சார்பில் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பரிசு – 32 லட்சம் பேருக்கு ‘சவுகத்-இ-மோடி’ கிட்!

டெல்லி: இந்த ஆண்டின் ரம்ஜான் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ஏழ்மையான இஸ்லாமியர்களுக்கு பாஜக பெரிய பரிசு அளிக்க இருக்கிறது. ‘சவுகத்-இ-மோடி’ என்ற பெயரில், 32 லட்சம் இஸ்லாமியர்கள் ஊரடங்கு காரணமாக சிரமமின்றி ரம்ஜான் கொண்டாடும் வகையில் கிப்ட் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

பாஜகின் சிறுபான்மை பிரிவின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ‘சவுகத்-இ-மோடி’ கிட், நாடு முழுவதும் உள்ள ஏழை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த கிட்டில் ஆடைகள், சேமியா, பேரீச்சம்பழம், உலர் பழங்கள், சீனி, குர்தா-பைஜாமா மற்றும் பெண்களுக்கான ஆடைகள் ஆகியவை அடங்கும். ஒரு கிப்டின் மதிப்பு ரூ.500 முதல் ரூ.600 வரை இருக்கும். இது ரம்ஜான் பரிசாக வழங்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும்.

இது டெல்லியில் உள்ள நிஜமாமுதீனில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடங்கப்பட்டது. 32 ஆயிரம் மசூதிகளுடன் இணைந்து, 32 ஆயிரம் பேர் இந்த கிட்டை ஏழ்மையான இஸ்லாமியர்களுக்கு வழங்குவார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *