பாஜகவின் மிரட்டலுக்கு விஜய் பணிந்தால் அரசியல் எதிர்காலம் சூனியமாகும் என திருமாவளவன் கடும் எச்சரிக்கை

மத்திய அரசின் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக கூட்டணி நடத்திய போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். இத்தகைய மிரட்டல்களுக்கு விஜய் அடிபணிந்தால் அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்றும், அவர் அதற்கு இடம் தரமாட்டார் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச போர் பதற்றத்தால் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இதில் மெத்தனம் காட்டுவதாக அவர் சாடினார். மேலும், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அண்ணாமலையின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், இது தேர்தலுக்கானது அல்ல, மக்களுக்கான போராட்டம் என்றார்.