பாகிஸ்தான் 12 துண்டுகளாகப் பிரிகிறதா? ஷெபாஸ் – அசிம் முனிர் ரகசியத் திட்டம் அம்பலம்

பாகிஸ்தான் 12 துண்டுகளாகப் பிரிகிறதா? ஷெபாஸ் – அசிம் முனிர் ரகசியத் திட்டம் அம்பலம்

நிர்வாக வசதிக்காக பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களை உடைத்து மொத்தம் 12 சிறிய மாகாணங்கள் அல்லது நிர்வாகப் பகுதிகளை உருவாக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு முடிவு செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அப்துல் அலீம் கான் மூலம் இந்தக் கிளுகிளுப்பான செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா உட்பட பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான பதற்றம் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு மாகாணத்தையும் மூன்றாகப் பிரிக்கும் திட்டம் உள்ளது—பஞ்சாப் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பஞ்சாபாகவும்; சிந்து கராச்சி, மத்திய மற்றும் மேல் சிந்துவாகவும்; மற்றும் கைபர் பக்துன்க்வா வடக்கு, தெற்கு மற்றும் பழங்குடி மண்டலங்களாகவும் பிரிக்கப்படும். இருப்பினும், பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) உட்பட பல அரசியல் கட்சிகள் சிந்து மாகாணத்தை பிரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விமர்சகர்களின் கருத்துப்படி, இந்த நடவடிக்கை பிரச்சனைகளை தீர்ப்பதை விட புதிய நெருக்கடியை உருவாக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *