பள்ளி விடுமுறை நிறைவு: நாளை முதல் சிறப்பு பஸ்கள்

விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றி நகரங்களுக்குத் திரும்பும் வகையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த சூழலில், வார இறுதி விடுமுறையும் சேர்ந்ததால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து நாளை (மேன் 30) மற்றும் நாளை மறுநாளில் (மே 31) மொத்தம் 2,510 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், நேரடி டிக்கெட் கவுன்டர்களிலும் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த சிறப்பு பஸ்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயண வசதியை உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.