பல் துலக்கிய பிறகும் வாயில் துர்நாற்றமா இந்த ஆபத்தான நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்

தினமும் சரியாக பல் துலக்கினாலும் சிலருக்கு வாயில் துர்நாற்றம் வீசும், இது ‘ஹலிடோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. 85 சதவீத பிரச்சனைகள் வாயிலிருந்தே தொடங்கினாலும், மீதமுள்ள 15 சதவீத காரணங்கள் கல்லீரல், சிறுநீரகம் அல்லது நீரிழிவு போன்ற உடல் உறுப்புகளின் பாதிப்பால் ஏற்படலாம். போதுமான உமிழ்நீர் சுரக்காதது, சைனஸ் தொற்று மற்றும் நாள்பட்ட செரிமானக் கோளாறுகள் காரணமாகவும் சுவாசத்தில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சிக்கலில் இருந்து விடுபட தினமும் இருமுறை பற்பசை கொண்டு பல் துலக்குவதுடன் நாக்கையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது வாயில் பாக்டீரியா வளர்வதைத் தடுக்கும். கிராம்பு அல்லது புதினா இலைகளை மெல்லுவது இயற்கையான தீர்வைத் தரும். இருப்பினும் பிரச்சனை தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.