பயங்கர காட்டுத்தீ: 36 ஏக்கர் நிலம் கருகி நாசம்!
March 25, 2025

தென் கொரியாவின் தென் கிழக்குப் பகுதிகளில் பரவிய பயங்கர காட்டுத்தீ காரணமாக 36 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் கருகி நாசமடைந்துள்ளது. இந்த தீ தீவிரமாக பரவுவதால் அப்பகுதியின் வானம் முழுவதும் சாம்பல் நிறத்தில் காட்சி அளிக்கின்றது. சான்சியாங்க் பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ, பெரும்பாலான பகுதியை பாதித்துள்ளதால் அவசரமாக தீயணைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு பணியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கடுமையான முயற்சிகளின் பிறகு, தீயின் பரவலுக்கு கட்டுப்பாடு வரவில்லை என்றாலும், தற்போதைய நிலவரப்படி 90 சதவிகிதம் பரவிய பகுதிகளில் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது. எது காரணமாக இந்த தீ பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.